<?xml version="1.0"?>
<rss version="2.0">
   <channel>
      <title>ஏறு தழுவுதல்  by Saikavin</title>
      <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk</link>
      <description>ஏறு தழுவுதல் நம் பாரம்பரியம்  ஆகும் .</description>
      <language>en-us</language>
      <pubDate>2020-07-01 13:09:49 UTC</pubDate>
      <lastBuildDate>2025-11-22 14:58:44 UTC</lastBuildDate>
      <webMaster>hello@padlet.com</webMaster>
      <image>
         <url>https://padlet.net/icons/png/1f402.png</url>
      </image>
      <item>
         <title>ஏறுதழுவுதல் </title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644979550</link>
         <description><![CDATA[<div><strong><em>ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.</em></strong></div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-07-01 13:32:06 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644979550</guid>
      </item>
      <item>
         <title>நடைபெறும் இடங்கள் </title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644980333</link>
         <description><![CDATA[தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு , தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-07-01 13:33:02 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644980333</guid>
      </item>
      <item>
         <title>பெயர் விளக்கம் </title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644982512</link>
         <description><![CDATA[<div>சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-07-01 13:35:18 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644982512</guid>
      </item>
      <item>
         <title> ஜல்லிக்கட்டின் வகைகள் </title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644983504</link>
         <description><![CDATA[<pre><strong><em>வேலி ஜல்லிக்கட்டு</em></strong></pre><div><br><br></div><div>வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.<br><br></div><pre><strong><em>வாடிவாசல் ஜல்லிக்கட்டு</em></strong></pre><div><br><br><br></div><div>மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.<br><br></div><pre><strong><em>வடம் ஜல்லிக்கட்டு</em></strong></pre><div><br><br></div><div>வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.</div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-07-01 13:36:31 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/644983504</guid>
      </item>
      <item>
         <title>வரலாறு</title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645003230</link>
         <description><![CDATA[<div>பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</div>]]></description>
         <enclosure url="https://padlet-uploads.storage.googleapis.com/340843216/5672e0c92c91e3ee1915e81d2f6f850b/250px_A_Bull_baiting_inscription_1.jpg" />
         <pubDate>2020-07-01 13:58:17 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645003230</guid>
      </item>
      <item>
         <title>ஜல்லிக்கட்டு போராட்டங்கள் </title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645941229</link>
         <description><![CDATA[சில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.]]></description>
         <enclosure url="https://padlet-uploads.storage.googleapis.com/340843216/b064630a40bfbc95113c17944c82e139/___________________02.jpg" />
         <pubDate>2020-07-02 12:33:31 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645941229</guid>
      </item>
      <item>
         <title>குழு நபர்கள் 9 D</title>
         <author>saikavin</author>
         <link>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645983155</link>
         <description><![CDATA[<div>சாய்கவின்  <br>கோகுல்  கிருஷ்ணா  விஷால் ஆனந்த்<br>ரோஹித் </div>]]></description>
         <enclosure url="" />
         <pubDate>2020-07-02 13:27:01 UTC</pubDate>
         <guid>https://padlet.com/saikavin/ev29lkon1n6pcbnk/wish/645983155</guid>
      </item>
   </channel>
</rss>
